Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டீ, பிஸ்கட்
People In Flood - குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு மக்களுக்கு மக்கள் நீதி மய்ய மகளிரணியினர் சார்பில் டீ, பிஸ்கட் வழங்கபட்டது.
HIGHLIGHTS
People In Flood - காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மக்கள் நீதி மய்ய மகளிரணி நிர்வாகி சித்ரா ஏற்பாட்டின் பேரில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எஸ்.ஐ. மலர்விழி, வி.ஏ.ஒ. முருகன் டீ, பிஸ்கட் வழங்கி துவக்கி வைத்தனர். மாவட்ட பொருளாளர் நந்தகுமார், துணை செயலாளர் சிவகுமார், பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். நடராஜா மண்டபம், ஐயப்பா மண்டபம், வாசவி மண்டபம், ராஜேஸ்வரி மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில் டீ, பிஸ்கட் வழங்கப்பட்டன. நிர்வாகிகள், உஷா, மல்லிகா, விமலாவேணி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2