/* */

காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !

குமாரபாளையம் காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம்!

குமாரபாளையம் காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் நகரம் 33 வார்டுகளை கொண்டது. ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை கொண்ட இங்கு, வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் காவிரி ஆற்றில் நேரடியாக கலந்து, குடிநீர் மாசற்றதாக மாறி வருகிறது. நகரில் உள்ள பல சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால், குடிநீர் மாசடைகிறது என, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாயப்பட்டறைகளை இடித்து தரைமட்டமாக்கினர். ஆனால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குறித்து யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலை இருந்து வந்தது. இதனால் குடிநீர் மாசு, அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டது. இதனால் வீடுகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் குமரன், பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:

வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேக்கி வைக்க பிரம்மாண்டமான டேங்க், கலைமகள் வீதி, நகராட்சி அலுவலகம் முன்பும், அனைத்து பகுதி கழிவுநீரும் குழாய்கள் மூலம் கொண்டு சென்று, மணிமேகலை தெருவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இணைக்கப்படும். அங்கிருந்து சுத்திகரிப்பு செய்து தூய்மையான நீர் காவிரியில் திறந்து விடப்படும். ரூ. 16.3 கோடி மதிப்பில் இதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் காவிரி கரையில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On: 24 April 2024 12:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...