/* */

மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கு செயற்கை கால் வழங்கிய பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர்…

மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கு செயற்கை கால் வழங்கி உதவிய பள்ளிபாளையம் காவல் ஆய்வாளரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கு செயற்கை கால் வழங்கிய பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர்…
X

தொழிலாளி கந்தசாமிக்கு காவல் ஆய்வாளர் சந்திரகுமார் செயற்கை கால் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் வசிப்பவர் கூலி தொழிலாளி கந்தசாமி. 58 வயதான இவர், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், அவரது வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வந்தார்.

இது பற்றி பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமாரிடம் மனித நேயம் உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகி சின்னசாமி, ஆனந்த் ஆகியோர் கூறினர். இதைத் தொடர்ந்து, கந்தசாமிக்கு உதவி செய்வதாக கூறிய காவல் ஆய்வாளர் சந்திரகுமார் உடனடியாக செயற்கை கால் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கந்தசாமிக்கு கொடுத்து உதவி செய்தார். மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கு செயற்கை கால் வழங்கி உதவிய பள்ளிபாளையம் காவல் ஆய்வாளரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி) ஆராய்ச்சியாளர்களால் 'கதம்' என்ற பெயரில் இந்தியாவின் முதல் பன்மைய செயற்கை முழங்கால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 'கதம்' என்பது ஒரு பன்மைய செயற்கை முழங்கால். விபத்தினால் முழங்காலின் மேல்பகுதி வரை இழந்தவர்கள் எளிதாக நடப்பதற்கு உதவும்.

இந்தத் தயாரிப்பு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். தற்போது புழக்கத்தில் இருக்கும் செயற்கை கால்களை, நம் நாட்டினர் பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், அவற்றைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் பலரும் சில அசெளகர்யங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், இந்திய மக்களின் தேவைகளை மனதில் வைத்து, மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, உருவாக்கப்பட்டதுதான் 'கதம்'.

தற்போது, கதம் வகையான செயற்கைகால் தொழிலாளி கந்தசாமிக்கு, பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமார் உதவியால் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகாலைப் பயன்படுத்துவோர், வண்டி ஓட்டுவது, தரையில் உட்காருவது, 160 டிகிரியில் காலை மடக்குவது, பிறர் துணையின்றி பொதுப்போக்குவரத்தை மேற்கொள்வது உள்ளிட்ட வழக்கமான வேலைகளைச் சிரமமின்றி செய்யலாம் என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 Nov 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  4. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  5. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  6. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  7. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  8. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  9. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  10. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...