Begin typing your search above and press return to search.
சோழவந்தான் அருகே தியாகிகளை கௌரவித்த வருவாய்த் துறையினர்
மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உத்தரவின்பேரில் தியாகிகள் வீட்டுக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
HIGHLIGHTS
சுதந்திரப் போராட்ட தியாகிகளை வருவாய்த்துறையினர் கௌரவித்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நாராயணபுரம் கிராமத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி ராஜு தேவர், காடுபட்டி கிராமத்திலுள்ள தியாகி ராமலிங்கம் செட்டியார் மனைவி மாரியம்மாள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உத்தரவின்பேரில், வாடிப்பட்டி வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் , தென்கரை வருவாய் அலுவலர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் முள்ளிப்பள்ளம் மணிவேல், தென்கரை ஜெயபிரகாஷ் ஆகியோர் தியாகிகள் வீட்டுக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர்.