/* */

மதுரை கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம்..! பக்தர்களுக்கு அன்னதானம்..!

மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம்..! பக்தர்களுக்கு அன்னதானம்..!
X

மதுரை மேலமடை சௌபாக்ய விநாயகர் ஆலயங்களில்,  திருக்கல்யாணம்.

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருக்கல்யாண விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இதே போல் இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள மேடையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கணேசன் பட்டர் பூஜை செய்து திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அறங்காவலர் வீரபாண்டி, ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டி உள்பட கிராம பொதுமக்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டி மற்றும் கிராமம் பொதுமக்கள் செய்தனர். இதைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள்சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. காடுபட்டிபோலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ் திருக்கோவில் திருக்கல்யாண நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டு மீனாட்சி அம்மனை வழிபட்டனர். இதே போல, மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கிய விழா ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மேலும், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வரசக்தி விநாயகர் ஆலயம், முத்துமாரியம்மன் ஆலயம், அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம் ஆகிய கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது. மதுரை மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயத்தில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிவன் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்களும் ,அதைத்தடுத்து, சுவாமி அலங்கரிக்கப்பட்டு, மகா ஹோமங்களும் திருக்கல்யாண நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதான வழங்கப்பட்டது. தாசில்நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், திருக்கல்யாணத்தை முன்னிட்டு, அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Updated On: 21 April 2024 10:42 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!