/* */

கண்மாயில் ஊராட்சித் தலைவர் மண் அள்ளியது தொடர்பாக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம் , டிராக்டர்கள், டிப்பர் லாரிகளை பயன்படுத்தி 200-க்கும் அதிகமான லோடு மண்ணை அள்ளி உள்ளார்

HIGHLIGHTS

கண்மாயில்  ஊராட்சித் தலைவர் மண் அள்ளியது தொடர்பாக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
X

சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிமன்றம்

சிவகங்கை மாவட்டத்தில், கண்மாயில் ஊராட்சி மன்ற தலைவர் சட்ட விரோதமாக மண் அள்ளிய வழக்கு; அரசு பதிலளிக்க மதுரை கிளை உத்தரவு:

சிவகங்கை மாவட்டத்தில், கண்மாயில் ஊராட்சி மன்ற தலைவர் சட்ட விரோதமாக மண் அள்ளிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், மகிபாலன் பட்டியை சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மகிபாலன்பட்டியின் பாஸ்கரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர், எங்கள் ஊராட்சிக்குள்பட்ட உவச்சான் கண்மாயில், சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம் மூலம், டிராக்டர்கள் மற்றும் டிப்பர் லாரிகளை பயன்படுத்தி 200-க்கும் அதிகமான லோடு மண்ணை அள்ளிச்சென்றுள்ளார்.இதனால், இந்த கண்மாய் பாழானதுடன், கனிம வளமும் திருடப்பட்டுள்ளது.

எங்கள் பகுதியில் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எங்கள் பகுதியில், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு இதுகுறித்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Updated On: 9 Sep 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்