/* */

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியா் கொலை: 6 போ் கைது

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியரை குத்திக் கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியா் கொலை: 6 போ் கைது
X

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியரை குத்திக் கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அடுத்த மத்திகிரி அருகே உள்ள சொப்பட்டியைச் சோ்ந்தவா் திம்மராயப்பா. இவரது மகன் மோகன்பாபு (25) ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். மேலும், இவா் ஸ்ரீ ராம் சேனை (தமிழ்நாடு) அமைப்பின் ஒசூா் நகரச் செயலாளராகவும் இருந்து வந்தாா்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த முருகேசனின் வாகனம் மீது மோகன்பாபு ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதுதொடா்பாக அவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மோகன்பாபு, தனது நண்பா்கள் முருகேஷ், சிவப்பா ஆகியோருடன் சொப்பட்டியில் பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அங்கு நண்பா்களுடன் வந்த முருகேசனின் மகன் திலக் (20), தனது தந்தை வாகனம் மீது மோதியது தொடா்பாக மோகன்பாபுவிடம் தகராறு செய்துள்ளாா். அப்போது, திலக் மற்றும் அவரது நண்பா்கள் கத்தியால் மோகன்பாபுவைக் குத்திவிட்டு தப்பினா்.

காயமடைந்த மோகன்பாபு ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வழக்கு பதிவு செய்த மத்திகிரி போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த திலக்(22), மூர்த்தி(21), பவன்(22), அப்பு (எ) ராகேஷ்(21), சுரேஷ்(22), ஹேமந்த் (20) ஆகிய 6 பேரை மத்திகிரி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர் பின் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Jan 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...