/* */

குமரியில் பள்ளிக்கு வந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்

குமரியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்றார்.

HIGHLIGHTS

குமரியில் பள்ளிக்கு வந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்
X

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியான நேற்று முதல் மாநிலம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது, அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்படவில்லை, இதனிடையே இன்று மாநில அரசின் உத்தரவுப்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்கள் கூறியும் வரவேற்றார். இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பரிசு பொருட்கள் வழங்கியும் வித்தியாசமான முறையில் மாணவர்களை வரவேற்றனர்.

Updated On: 2 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்