/* */

குடியரசு தினத்தையொட்டி குமரியில் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குமரியில் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

குடியரசு தினத்தையொட்டி குமரியில் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
X
ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நாட்டின் 73 வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது, அதற்கான முன்னேற்பாடுகள் தயாராகி வரும் நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர், மேலும் கன்னியாகுமரி, நாகர்கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்ட பிறகே அவர்கள் ரயிலில் பயணிக்க ரயில்வே போலீசார் அனுமதிக்கின்றனர்.

இதே போன்று ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும் சரக்கு பொருட்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 25 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு