/* */

காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

காஞ்சிபுரத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
X

கைதான லோகநாதன், பிரசாந்த், விவின் கேபா

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் குரு கோவில் அருகே, ஒரகடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி என்பவர், கடந்த 6-ம் தேதி இரவு 2 மணியளவில் பணியை முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பாலாஜி சிவகாஞ்சி காவல்துறையினரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் உதவியுடன் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பதுங்கியிருந்த பூந்தண்டலம் சேர்ந்த லோகநாதன் என்கிற லோகு (22), விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரசாந்த் (19), குன்றத்தூரை சேர்ந்த விவின் கேபா (19) மற்றும் இரண்டு சிறுவர்கள் என ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையொட்டி இவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த 2 செல்போன்கள் மற்றும் திருடிச் சென்ற 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 Jun 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  3. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  4. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  6. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  7. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்