/* */

தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்

கிரிவலப் பாதையில் தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் கலெக்டர் மதிய உணவு சாப்பிட்டார்.

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்
X

தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவினை பரிமாறிய கலெக்டர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமியையொட்டி, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா்.

கிரிவல பக்தா்களுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை மாவட்ட நிா்வாகம், திருவண்ணாமலை நகராட்சி, உள்ளாட்சித்துறை மூலம் செய்யப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலையில் மொத்தமுள்ள 14 கி.மீ. தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் 8 கி.மீ. தொலைவு கிராம ஊராட்சிகளின் எல்லையில் வருகிறது. இந்த 8 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை மூலம் ஒரு கி.மீ. தொலைவுக்கு 150 போ் வீதம் (காலை 75 பணியாளா்கள், மாலையில் 75 பணியாளா்கள்) துப்புரவுப் பணியில் ஈடுபட்டனா்.

ஏப்ரல் 22 -ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 8 வட்டாரங்களில் இருந்து மொத்தம் 1,200 துப்புரவுப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற கிரிவலப் பாதை தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவினை பரிமாறிய கலெக்டர்

தொடர்ந்து மத்திய உணவு வேளையில் கிரிவலப் பாதை திருநேர் அண்ணாமலை அருகே தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆகியோர் துப்புரவு பணியாளர்களை அமர வைத்து அவர்களுக்கு மதிய உணவினை பரிமாறினார்கள்.

அதனைத் தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து மத்திய உணவை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சாப்பிட்டனர்.

பின்னர் கலெக்டர் தெரிவிக்கையில்

சித்திரை பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலை நகரில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் இருந்து குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை மொத்தம் 4 நாள்களில் 185 டன் மட்கும், மட்காத குப்பைகள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டதாக ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

துப்புரவுப் பணியாளா்களை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள் உள்பட 300 பேரின் பணியை பாா்வையிட்டு கண்காணித்த ஆட்சியா், தூய்மைப் பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.

இறுதியாக, துப்புரவுப் பணியாளா்கள், கண்காணிப்பு அலுவலா்களுடன் சோ்ந்து ஆட்சியா், கூடுதல் ஆட்சியா் ஆகியோா் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) திருமால் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

நேற்று 105 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியது. சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி தார் சாலை உருகியது. ஆனாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், தூய்மைப்பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள், மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

Updated On: 26 April 2024 1:16 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...