Begin typing your search above and press return to search.
கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அருகே பவானி ஆற்றில் முழ்கி இளைஞர் உயிரிழப்பு
கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அருகே பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் தண்ணீர் முழ்கி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியை சேர்ந்த ரபிக் என்பவர் மகன் தவுபிக் (21), இவர் நேற்று தனது மாமா மற்றும் அத்தையுடன் ஈரோடு மாவட்டம், கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
கொடிவேரி ஆற்று பாலத்திற்கு கீழ் இறங்கி குளிக்க சென்ற தவுபிக் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குறித்துள்ளார். நீச்சல் தெரியாமல் தத்தளித்த தவுபிக் நீரில் மூழ்கியுள்ளார்.
அருகில் இருந்தோர் மீட்டு தவுபிக்-ஐ 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்து விட்டதாக கூறியதை அடுத்து தவுபிக் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.