/* */

கோபிசெட்டிபாளையம் அருகே மொபட் திருடிய இளைஞர் கைது

கோபி அருகே டி.என்.பாளையத்தில் நண்பரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு வந்தவரின் மொபட்டை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே மொபட் திருடிய இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட சுபாஷ்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே சத்தி-அத்தாணி சாலையில் உள்ள மாதையன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 44). இவர், சம்பவத்தன்று டி.என்.பாளையம் அண்ணாசிலையில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலை அனுமன்நகரில் உள்ள நண்பரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு மொபட்டில் வந்துள்ளார். பின்னர், சாலையில் மொபட்டை நிறுத்தி விட்டு நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் திருட்டு போனது.

இதுகுறித்து ரவி அளித்த புகாரில் பேரில் மொபட்டை திருடிய மர்ம நபரை பங்களாப்புதூர் போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், இன்று காலை பங்களாப்புதூர் போலீசார் கொங்கர்பாளையம் குமரன் கோவில் மலையடிவாரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மொபட்டில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தனர். கொங்கர்பாளையம் சாவடி வீதியை சேர்ந்த அய்யப்பன் மகன் சுபாஷ் (21) என்பதும், ரவியின் மொபட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சுபாஷை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 13 Sep 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!