Begin typing your search above and press return to search.
சத்தியமங்கலம் பவானி ஆற்றில் ஆண் பிணம் மீட்பு
சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானி ஆற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.