/* */

அந்தியூர் அருகே தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழப்பு

அந்தியூர் அருகே தெரு நாய்கள் கடிதத்தில் விவசாயி வளர்த்து வந்த இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழப்பு
X

இறந்த ஆடுகளை ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுக்காடு செல்லும் சாலையில் மயில் என்பவர் வசித்து வருகிறார்.விவசாயி. இவர் செம்மறியாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் ஆடுகளுக்கு தீவனம் வைக்க மயில் சென்ற போது 2 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதன் பின்னர் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை ஆய்வு செய்ததில் தெரு நாய்கள் கடித்து கொன்றது தெரியவந்தது. இதனால் 20ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் உயிரிழந்ததற்கு வருவாய் துறையினர் உரிய இழப்பீடு வழங்கி தெரு நாய்கள் தொந்தரவை பேரூராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி மயில் வலியுறுத்தினார்.

Updated On: 20 May 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?