Begin typing your search above and press return to search.
பவானி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
பவானி அருகே ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானி சீனிவாசபுரம் பகுதி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்து வந்தது. இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சடலத்தை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.