/* */

ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் 60 குண்டுகள் முழங்க காவலர் நினைவு அஞ்சலி

உயிர் நீத்த காவலர்களுக்கு ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் 60 குண்டுகள் முழங்க காவலர் நினைவு அஞ்சலி
X

வீரவணக்கம் நாளில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர், எஸ்பி மற்றும் காவலர்கள்.

காவல்துறையில் உயிர்நீத்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உயிர் நீத்த அதிகாரிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எஸ்பி., சசிமோகன் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த அதிகாரிகளுக்கு 20 குண்டுகள் வீதம், மூன்று முறை 60 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றில் உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எஸ்பி., சசிமோகன் ஆகியோர் கேடயம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆர்டிஓ., பிரேமலதா, ஏடிஎஸ்பி.,கள் பாலாஜி, கனகேஸ்வரி, ஈரோடு டவுன் டிஎஸ்பி., ஆனந்தகுமார், ஏஎஸ்பி., கௌதம் கோபால், ஆயுதப்படை ஏடிஎஸ்பி., ராஜ் கண்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 21 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்