/* */

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நசியனூரில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், ஓசப்பாடி கிராமம் ஆதிதிராவிடர்காலனி பகுதியில் சேகர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் நடந்து தனியாக வசித்து வருகின்றனர். இதில், இளைய மகன் குமரேசன் (வயது 28) பெங்களூர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அப்போது பேஸ்புக் மூலம் ஈரோடு மாவட்டம், நசியனூர் பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவரின் மகள் பூவரசியை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் தங்கி வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.குமரேசன் அவ்வபோது நசியனூர் பகுதியில் உள்ள பூவரசியை சென்று பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து பூவரசியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு குமரேசன் நசியனூரில் பூவரசியின் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நீண்ட நேரமாக அறையை விட்டு குமரேசன் வெளியே வராததால் பூவரசி, அவரின் தாய் மீனாட்சி ஆகியோர் குமரேசன் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது சேலையில் குமரேசன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து குமரேசன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On: 15 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்