Begin typing your search above and press return to search.
கோபிச்செட்டிபாளையம் அருகே மொடச்சூர் ஊராட்சியில் வரும் முன் காப்போம் திட்ட முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் கோபி அருகே மொடச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சைமலையில் நடந்தது
HIGHLIGHTS
கோபிச்செட்டிபாளையத்தில் வரும் முன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம், கோபி அருகே மொடச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சைமலை வேலா மண்டபத்தில் நடந்தது. முகாமை கோபி நகராட்சி தலைவர நாகராஜ், திமுக ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தனர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமார், ஓம்பிரகாஷ், சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.