/* */

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் : கரையோர மக்களே உஷார்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

HIGHLIGHTS

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் : கரையோர மக்களே உஷார்!
X

கோப்பு படம்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன. பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அதன் உபரி நீர், தற்பொழுது வெளியேறி கொண்டுள்ளது.

தற்போது அணையில் 104. 1 அடி எட்டி உள்ளதால் எந்த நேரத்திலும் பவானிசாகர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும், இதனால் பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதிகளான, பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறும், பவானி ஆற்றில் மீன் பிடிக்கவோ துணி துவைக்கவும், மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் வரை, பொதுமக்கள் ஆற்றுக்குள் செல்ல வேண்டாம் எனவும், ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பவானிசாகர் முதல், கூடுதுறை வரை உள்ள பவானி ஆற்றுப் பகுதிகளில், மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Updated On: 19 Nov 2021 1:40 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்