/* */

ஈரோடு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வைராபாளையம் பகுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

ஈரோடு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வைராபாளையம், ராஜகணபதி வீதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி கோகிலா (வயது 22). இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நள்ளிரவு 2.45 மணி அளவில் கோபிநாத் திடீரென எழுந்து பார்த்தபோது மனைவி கோகிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோகிலா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை வருடமே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஒ.விசாரணையும் நடைபெறுகிறது.

Updated On: 9 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?