/* */

ஈரோட்டில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்புலிகள் கட்சியின் தேனி மாவட்ட துணைச்செயலாளர் படுகொலையை கண்டித்து, ஈரோட்டில் தமிழ்புலிகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

ஈரோடு மாவட்ட தமிழ்புலிகள் கட்சியின் சார்பில், கால்நடை மருத்துவமனை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தேனி மாவட்டத்தில் நேற்றிரவு, தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசை, மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். இந்த படுகொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் இன்று, கால்நடை மருத்துவமனை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும், தமிழகத்தில் தொடரும் சாதிய கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 22 Jun 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு