Begin typing your search above and press return to search.
ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 87ஆயிரத்து 503 பேர் உள்ளனர். மாநகராட்சியில் மட்டும் முதல் தவணை தடுப்பூசியினை 82.71சதவீதம் பேர், அதாவது 3 லட்சத்து 20 ஆயிரத்து 522 பேர் செலுத்தியுள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசியினை 53.67 சதவீதம் பேர் அதாவது 2 லட்சத்து 7 ஆயிரத்து 971 பேருக்கு செலுத்தியுள்ளதாக ஈரோடு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.