/* */

தொழில் சார் சமூக வல்லுனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர் தகவல்

தொழில் சார் சமூக வல்லுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

தொழில் சார் சமூக வல்லுனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர் தகவல்
X

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ஈரோடு மாவட்டத் தில் பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், சென்னி மலை மற்றும் தாளவாடி ஆகிய 5 ஒன்றியங்களில் 77 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டு வரும் சிறு, குறு,நுண் நிறுவன செயல்பாடுகளை, தனிநபர் மற்றும் கூட்டு நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு ஊராட்சிக்கு ஒருவர் வீதம் தொழில் சார் சமூக வல்லுனர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப் பிப்பவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவை சார்ந்தவராகவும், அதே ஊராட்சியை சார்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 25 வயதில் இருந்து 45 வயது உடையவர்களாக இருத்தல் வேண்டும். இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கியில் சமூகபணி, வணிகவியல், வேளாண்மை, வணிகநிர்வாகம் கால்நடை அறிவியல் பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆன்டிராய்டு செல்போன் வைத்திருக்க வேண்டும். அதை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். வாழ்வாதார வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாடு செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகியாகவோ அல்லது பணியாளராகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவோ இருக்கக்கூடாது.

மேற்கண்ட தகுதிகளை உடையவர்கள் தங்கள் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் உள்ள தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Updated On: 26 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!