/* */

ஈரோடு அருகே ஏட்டு மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை

சத்தியமங்கலத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு ஏட்டு மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.

HIGHLIGHTS

ஈரோடு அருகே ஏட்டு மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கரட்டூர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரமோகன், தலைமை காவலர் .இவரது மனைவி தாமரைச்செல்வி (41). இவர்களுக்கு பிரவீன்-13 பிரனேஷ்-11 என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தாமரைச்செல்வி கடந்த இரண்டு வருட காலமாக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மிகவும் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென தாமரைச்செல்வி தனது கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது அலறல் சத்தம் கேட்டு முன் அறையில் படுத்திருந்த தலைமை காவலர் சந்திரமோகன் மற்றும் மகன்கள் ஆகியோர் அவரை மீட்டு சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தாமரைச்செல்வி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தாமரைச்செல்வி எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடித்தில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.

Updated On: 4 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!