/* */

ஊரடங்கு தளர்வு : இரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட சத்தியமங்கலம் பூ மார்க்கெட்

ஊரங்கு தளர்வு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு பிறகு சத்தியமங்கலம் பூ மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பதிக்கப்படும் பூக்கள், சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னர் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அண்டை மாநிலங்களான கர்நாடகா கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு பூ மார்க்கெட் செயல்பட அரசு தடை விதிகத்தது. இதனால் பூக்கள் விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து வந்தனர்.

இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்ததால், ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் மலர் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பூக்களை கொண்டு வந்து மீண்டும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இரண்டு மாதங்களாக நஷ்டத்ததை சந்தித்த மலர் விவசாயிகள் தற்போது மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 5 July 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!