/* */

சாலையில் சிறுத்தை நடமாட்டம்- வாகன ஓட்டிகள் பீதி

சாலையில் சிறுத்தை நடமாட்டம்- வாகன ஓட்டிகள் பீதி
X

சத்தியமங்கலம் அருகே வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ஏராளமான மான், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிறுத்தை, புலி மற்றும் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு அருகாமையில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து நாசம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தாளவாடியை சேர்ந்த இரண்டு பேர் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

கும்டாபுரம் என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது தீடீரென சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்துள்ளது. இதை கண்டு வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட தூரம் சாலையில் நடந்து சென்று பின்னர் காட்டுக்குள் சிறுத்தை சென்றதை அவர்கள் தனது செல்போனில் படம் பிடித்தனர். கிராம வனச்சாலையில் சிறுத்தை நடமாடுவதால் மலைகிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Updated On: 3 Feb 2021 4:52 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!