/* */

அரளி காய்களை சாப்பிட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொய்யாக்காய் என நினைத்து அரளி காய்களை சாப்பிட 4 சிறுவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

HIGHLIGHTS

அரளி காய்களை சாப்பிட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
X

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ்குமார் (வயது 8), உதயகுமார் (வயது 8), பூவரசன் (வயது 8). இவர்கள் 3 பேரும் தாசரிபாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த நிவேஷ் (வயது 7). அதே பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், 4 பேரும் தாசரிபாளையம் பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, வேலியில் முளைத்திருந்த அரளி காய்களை கொய்யாக்காய் என நினைத்து சாப்பிட்டுள்ளனர்.

பின்னர், சிறுவர்கள் 4 பேரும் தங்கள் வீட்டுக்கு சென்றபோது மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பெற்றோர் விசாரித்ததில் அரளி காய்களை சாப்பிட்டது தெரியவந்தது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் 4 பேரையும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 1 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!