Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் ஹெல்மெட் அணியாத 270 பேருக்கு அபராதம்
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 270 பேருக்கு அபராதம் விதித்ததாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
நேற்று ஒரு நாள் மட்டும் ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 270 வாகன ஓட்டிகளுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ரூ. 27 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.