Begin typing your search above and press return to search.
சிறுமியிடல் சில்மிஷம்: தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது
பென்னாகரம் அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
பென்னாகரம் அருகே உள்ள நடேசன் காட்டுக்கொல்லையை சேர்ந்தவர் பிரவீன்குமார்(28.) கூலித்தொழிலாளி. இவர் உறவினரின் மகளான 17 வயது சிறுமியை கடந்த, 2017 முதல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், அச்சிறுமியை தனியார் நிறுவனத்தில் சேர்த்து தன் வங்கிக் கணக்கை கொடுத்துள்ளார். அதன் மூலம் அச்சிறுமியின் சம்பள பணத்தையும் பெற்றுக் கொண்டு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து, அச்சிறுமி கடந்த, 21ந் தேதி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வனிடம் புகார் மனு அளித்தார். அதன் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி பிரவீன்குமாரை, போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.