/* */

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி
X

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மர்ம விலங்கு கடித்து 11ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பத்ரஹள்ளி ஆரல்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கவுண்டர். இவர் 20 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு தனது விவசாய நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். காலையில் தனது ஆட்டுபட்டியில் வந்து பார்த்த போது 11 ஆடுகள் மா்மவிலங்கு கடித்து உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து வனத்துறை மற்றும் கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளை ஆய்வு செய்து ஆடுகளை புதைக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து குழி தோண்டி உயிரிழந்த 11 ஆடுகளையும் புதைத்தனர். ஆடுகள் பலியான சம்பவத்தால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Updated On: 2 March 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...