Begin typing your search above and press return to search.
பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து மறியல்: 47 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் வஞ்சி தலைமையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர் நல நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விடுவதை நிறுத்த வேண்டும். படித்த இளைஞர்களுக்கு தகுதிகேற்ற வேலையை உருவாக்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலைகளை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என கோஷயிட்டு மறியல் செய்தனர்.
இதில் 43 ஆண்கள், நான்கு பெண்கள் உள்ளிட்ட 47 பேரை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.