/* */

அரூர் அருகே செட்டப் பாக்ஸ், கேபிள் ஒயர்கள் திருட்டு: 3 பேர் மீது போலீசார் வழக்கு

அரூர் அருகே செட்டப் பாக்ஸ், கேபிள் ஒயர்கள் திருடியதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூர் அருகே செட்டப் பாக்ஸ், கேபிள் ஒயர்கள் திருட்டு: 3 பேர் மீது போலீசார் வழக்கு
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆவலுாரைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன், வயது .42, இவர், சிபிராஜ் கேபிள் நெட்ஒர்க் என்ற நிறுவனத்தை கடந்த, 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

மல்லிகாபுரம், உட்டப்பட்டி, செங்கலேரி உள்ளிட்ட ஆறு கிராமங்களில் கேபிள் இணைப்பு வழங்கியுள்ளார். கடந்த மார்ச் 18ந்தேதி, குள்ளனுாரில் சத்யா என்பவரது வீட்டில் டிவியுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செட்டாப்பாக்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் வீட்டிற்கு வெளியே இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கேபிள் ஒயர்கள் திருடு போனது.

இது குறித்து நெடுஞ்செழியன் கோட்டப்பட்டி போலீசில் புகார் செய்தார் . புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரிப்பள்ளியை சேர்ந்த மதியழகன், வயது 45, கார்த்திக், வயது 27, மற்றும் அவர்களது உறவினர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

Updated On: 7 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...