பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை
ராஜூவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் உள்ள பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் பரோலில் வந்து தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் இருந்து வருகிறார். தொடர்ந்து பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பேரறிவாளனுக்குத் தமிழக அரசு பரோலை நீட்டித்து வருகிறது. மேலும் பரோலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்து கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு ஸ்கேன் எடுப்பதற்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் டி.எஸ்.பி., வெங்கடகிருஷ்ணன் தலைமையில் ஒரு உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 10 காவல் துறையினர் பாதுகாப்புடன் தர்மபுரியில் உள்ள தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாள் வந்திருந்தார். தொடர்ந்து பலத்த காவலர்கள் பாதுகாப்புடன் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யபட்டது. தொடர்ந்து சிறுநீரகம் தொடர்பாக அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்தவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தொடர்ந்து 2 மணியளவில் பரிசோதனைகள் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இதே மருத்துவமனைக்கு பேரறிவாளன் வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டார். தொடர்ந்து பேரறிவாளன் சிகிச்சைக்காக வந்ததால், தருமபுரி நகர் பகுதியில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.