Begin typing your search above and press return to search.
தேர்தல் நடத்தை விதிமீறல்- 24 பேர் மீது வழக்கு !
தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரைகளில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்ட 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது போன்ற நடவடிக்கைள் தொடரும் என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.