Begin typing your search above and press return to search.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 231பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கொரோனோ தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 248 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 26 ஆயிரத்து 485பேர்.