/* */

பாஜகவுக்கு எதிரான கூட்டணி நிலைக்காது - கோவையில் வானதி சீனிவாசன் பேச்சு

Coimbatore News- பாஜகவுக்கு எதிரான கூட்டணி நிலைக்காது என, கோவையில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

HIGHLIGHTS

பாஜகவுக்கு எதிரான கூட்டணி நிலைக்காது - கோவையில் வானதி சீனிவாசன் பேச்சு
X

Coimbatore News- செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்

Coimbatore News, Coimbatore News Today- கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சார்பில் பெண்கள் மாநாடு நடைப்பெற்றது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நீலகிரி, அவிநாசி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசியதாவது,

கேலோ இந்தியாவிற்கு மத்தியில் விளையாட்டு துறை அமைச்சகம் பெருமளவு நிதி உதவி செய்துள்ளனர். பிரதமர் தான் இதை துவக்கி வைத்திருக்கிறார். கோவையில் இந்த போட்டிகள் நடந்து கொண்டிருப்பதற்காக பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிலுமே பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை.

சென்னை விமான நிலையத்தில் மத்திய அரசாங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களில் இந்த மாநில முதல்வர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கூட செஸ் ஒலிம்பியாட் நடந்த போதும் இது போல பிரச்சனை செய்தார்கள். பிரதமரின் புகைப்படத்தை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் எப்படி மத்திய அரசாங்கத்தின் அனுமதியோடு ஒத்துழைப்போடு நடத்துகின்றனர்? தாத்தா தந்தை மகன் என மூன்று பேரும் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. கட்சியே குடும்ப கட்சி, அரசாங்கத்தையும் குடும்ப அரசாக எண்ணுகிறதா? இந்த அரசு விளம்பர அரசாங்கத்தை போல் சுயநலத்திற்காக செயல்படும் அரசாக இருப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். பிரதமர் படத்தை வைக்கவில்லை எனில், விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஓட்டுவோம்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பூஜ்ஜியம் என்றால் சட்டமன்றத்தில் எதற்காக எங்களது கேள்விக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள்? ஒவ்வொரு நாளும் திராவிட முன்னேற்றக் கழக அரசியல் என்பது பாரதிய ஜனதா கட்சியை வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சி அரசியல் என்பது பாஜகவை எதிர்ப்பதற்காகத் தான். பிஜேபி இல்லை என்றால் அரசியல் இல்லை என்று அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருமாவளவன் தாங்கள் இந்துக்கள் இல்லை என்று சொன்னால் அரசியலமைப்பு சட்டத்தின் படி இட ஒதுக்கீடு என்பது நீங்கள் பேசும் மக்களின் உரிமைகள் இல்லாமல் போகும். இதை புரிந்து கொண்டு தான் பேசுகிறாரா? திருமாவளவன். ஒன்றே தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதியை பாகுபாட்டிற்கு நாங்கள் ஆதரவாளர்கள் அல்ல, தீண்டாமையை முழு மூச்சாக எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கம்.

இண்டி கூட்டணி என்ற புள்ளி வைத்த கூட்டணி உருவாகும் போது, நாங்கள் சொன்னோம் இது நிலைக்காது. இவர்களுக்கு பொதுவான குறிக்கோள் எதுவும் இல்லை அவர்களுக்கான செயல் திட்டம் இல்லை. ஏனென்றால் புள்ளிக் கூட்டணி உருவானது குடும்ப அரசியலை காப்பாற்றுவதற்காக தான். அவர்களுக்கு மக்கள் நலன் என்பது பிரதானமாக இருந்ததில்லை.

நடிகர் விஜய் உட்பட யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்த பிறகு மக்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்ப்போம். மக்களுக்கு எப்படி பணி செய்கிறார் என்பதை பார்ப்போம். அதன் பிறகு எங்களது கருத்துக்களை சொல்வோம்” எனத் தெரிவித்தார்.

Updated On: 27 Jan 2024 12:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...