/* */

காரமடை அருகே குளத்தில் சுற்றித்திரியும் முதலை

குரும்பபாளையம் குட்டையில் முதலை நடமாட்டம் தென்பட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

காரமடை அருகே குளத்தில் சுற்றித்திரியும் முதலை
X

காரமடை அருகே குளத்தில் தென்பட்ட முதலை 

கோவை காரமடை அடுத்த பெள்ளாதி பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு உடைய பெரிய குளம் அமைந்து உள்ளது. இது சுமார் 30 அடி உயரம் கொண்டது.

கட்டாஞ்சிமலை, மருதூர், திம்மம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், ஏழுஎருமைப்பள்ளம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் இருந்து பெள்ளாதி குளத்துக்கு நீர்வரத்து உள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. எனவே அந்த பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெள்ளாதி குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து தற்போது ஒட்டுமொத்த நீர்நிலையும் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அங்கு தேங்கும் உபரிநீர் தண்ணீர் மறுகால் பாய்ந்து குரும்பப்பாளையம் குட்டைக்கு செல்கிறது.

இந்த நிலையில் குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளக்கரைக்கு சென்றபோது அங்கு உள்ள ஒரு பாறையில் பெரிய முதலை சாவகாசமாக படுத்திருந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் குரும்பபாளையம் குட்டையோரத்தில் கிடந்த முதலையை செல்போனில் படம் பிடித்தனர்.

அப்போது அது திடீரென தலையை தூக்கி பார்த்தது. பின்னர் பாறையில் இருந்து வெளியேறி தண்ணீருக்குள் சென்று விட்டது. அங்கு தற்போது நீந்தியபடி குளத்தை சுற்றி வருகிறது.

மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்டு வெள்ளம் குரும்பபாளையம் குட்டைக்கு வருகிறது. எனவே காட்டுக்குள் பதுங்கியிருந்த முதலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மேற்கண்ட குட்டைக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குரும்பபாளையம் குட்டையில் முதலை நடமாட்டம் தென்பட்டிருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

குரும்பபாளையம் குளத்தில் பதுங்கி நிற்கும் முதலையை தேடி பிடித்து அடர்ந்த காட்டுக்குள் உள்ள அணையில் பத்திரமாக விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Updated On: 9 Dec 2023 2:06 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...