/* */

அரியலூர்: தோட்டக்கலைத்துறை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: தோட்டக்கலைத்துறை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை திட்ட பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியநாகலூர் மற்றும் அஸ்தினாபுரம் ஊராட்சிகளில் தோட்டக்கலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், பெரியநாகலூர் ஊராட்சியில் காமராஜ் என்பவரின் 1.15 ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த மிளகாய் பயிர் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்டு, தற்பொழுது பாதிப்புக்குபின் மிளகாய் பயிர் பராமரிக்கப்பட்டு வருவதையும், அதன் ஊடு பயிராக சின்ன வெங்காயம் பயிர் செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளிடம் மழைக்கு பின் மிளகாய் பயிர் பராமரிப்பதற்காக மேற்கொண்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அஸ்தினாபுரம் ஊராட்சியில் பழனிசாமி என்பவரின் 1.50 ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலத்தில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட சம்பங்கி பூ வயலினை பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, கணக்கெடுக்கும் பணி நடைபெற்றபோது விவரங்கள் முறையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, கீழப்பழுர் அரசு தோட்டக்கலை பண்ணைiயினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 70,000 முந்திரி கன்றுகள், வரும் தைப்பட்டத்தில் பயிர் செய்வதற்காக தயார் நிலையில் உள்ள 2 இலட்சம் கத்தரிச் செடிகள், 1 இலட்சம் மிளகாய் செடிகள் மற்றும் விவசாயிகளுக்கு விற்பனைக்காக 10,000 தேக்கு மரக்கன்றுகள், 9,000 தென்னங்கன்றுகள், 1,000 புளியங்கன்றுகள், 3,000 மல்லிகைச் செடிகள் பயிர் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதை பார்வையிட்டு, விற்பனை செய்யப்படும் முறைகள் குறித்தும், தோட்டக்கலை பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் இரா.பழனிச்சாமி, தோட்டக்கலை துணை இயக்குநர் ப.ஆனந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சு.சண்முகம் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 24 Dec 2021 10:33 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  4. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  7. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  8. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  9. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு