/* */

வாக்கு எண்ணிக்கை 2 நாட்களாக நடைபெறும்: கலெக்டர் தகவல்

வாக்கு எண்ணிக்கை 2 நாட்களாக நடைபெறும்:  கலெக்டர் தகவல்
X

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி,வில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகரில் உள்ள வித்யா பொறியியல் கல்லூரியில் மே 2-ம் தேதி நடைபெறவுள்ளது.

கொரோனோ தொற்றுப் பரவல் காரணங்களால் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதுகுறித்து அனைத்துக் கட்சியினர், வேட்பாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கண்ணன் கூறும்போது, கொரோனோ தொற்றுப் பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, ராஜபாளையம் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ண இரு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 8 மேஜைகள் அமைக்கப்பட்டு 22 சுற்றுகளாக வாக்குஎண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதேபோன்று தபால் வாக்குகளை எண்ணவும் இரு மேஜைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதேபோன்று வில்லிபுத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ண இரு அறைகள் ஒதுக்கப்பட்டு 45 சுற்றுகளாகவும் சிவகாசி தொகுதிக்கு 12 மேஜைகள் அமைக்கப்பட்டு 31 சுற்றுகளாகவும், திருச்சுழி தொகுதிக்கு இரு அறைகளில் 14 சுற்றுகளாகவும், விருதுநகர் தொகுதிக்கு இரு அறைகளில் 16 மேஜைகள் அமைக்கப்பட்டு 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும், சாத்தூர் தொகுதிக்கு 2 அறைகளில் 16 மேஜைகளில் 44 சுற்றுகளாகவும், அருப்புக்கோட்டை தொகுதிக்கு 2 அறைகளில் 16 மேஜைகளில் 20 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு சராசரியாக 45 நிமிடங்கள் ஆகும்.

கொரோனோ கட்டுப்பாடுகளால் போதிய இடைவெளியில்தான் எண்ணிக்கை மேஜைகள் அமைக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கட்சியினர் கூடுதல் முகவர்களை நியமித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் மேஜைகள் அமைக்கப்பட்டு கூடுதல் சுற்றுகள் காரணமாக 2 நாட்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்காக 7 தொகுதிகளிலும் இம்மாதம் 29,30-ம் தேதிகளில் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் அமைக்கப்படும். அதில் முகவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனோ பரவலைத் தடுக்க முடியும் என்று கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், எஸ்பி பெருமாள் மற்றும் வேட்பாளர்கள், கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...