ஊராட்சித்துறை அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
ஊராட்சித்துறை அலுவலர்களுக்கான நவம்பர் மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
ஊராட்சித்துறை அலுவலர்களுக்கான நவம்பர் மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடைபெற்ற ஊராட்சி துறை அலுவலர்களுக்கான நவம்பர் மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுழல் கோப்பையினை வழங்கினார்.
பின்னர், சிறப்பாக பணியாற்றிய திருச்சுழி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் அர்சுனன் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சரவணமுத்து வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமமாலினி வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) பூங்கொடி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) காஜாமைதீன் பந்தே நவாஸ் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் திலகவதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.