Begin typing your search above and press return to search.
விருதுநகர்: இன்று நடக்கவிருந்த கால்நடை உதவியாளர் நேர்காணல் ஒத்திவைப்பு
விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் அழைப்பு கடிதங்கள், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி, இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும், இன்று 28-ம் தேதி முதல், மே 9-ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில், நேர்காணலில் பங்கேற்க வேண்டுமென்று, மாவட்ட ஆட்சியர் மேகநாதர் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற இருந்த கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு தயாராக இருந்த விண்ணப்பதாரர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.