/* */

திருவில்லிபுத்தூரில் ராணுவ வீரர் வீட்டில் பணம், நகை திருட்டு

Money and jewelery stolen from soldier's house in Srivilliputhur

HIGHLIGHTS

திருவில்லிபுத்தூரில் ராணுவ வீரர் வீட்டில் பணம், நகை திருட்டு
X

திருவில்லிபுத்தூரில், ராணுவ அதிகாரி வீட்டின் கதவை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (49). இவர் ராணுவத்தில் சுபேதார் மேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன் விடுமுறையில் ஆனந்தராஜ் திருவில்லிபுத்தூருக்கு வந்தார். நேற்று சிவகாசியில் வசித்துவரும் தனது தந்தையை பார்ப்பதற்காக ஆனந்தராஜ் குடும்பத்துடன் சிவகாசிக்கு வந்தார். தந்தையை பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிப்பதை பார்த்து ஆனந்தராஜ் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த 80 ஆயிரம் ரூபாய் பணம், புதிய செல்போன், கேமிரா மற்றும் சில பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ராணுவ அதிகாரி ஆனந்தராஜ், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், ராணுவ அதிகாரி வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  3. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  4. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  5. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  6. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  7. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  8. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  9. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  10. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...