Begin typing your search above and press return to search.
ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அமமுகவினர் மெளன ஊர்வலம்
இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னால் முதல்வர் MGR நினைவு நாளை முன்னிட்டு மெளன ஊர்வலம் நடைபெற்றது
HIGHLIGHTS
இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு மெளன ஊர்வலம் நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்ட இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர ஒன்றிய. பேருராட்சி சார்பில் நகர செயலாளர் செல்லப்பாண்டியன் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குமார் ஆகியோர் தலைமையில் முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 34வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் இருந்து மவுன ஊர்வலமாக சென்று ஜவகர் மைதானம் பகுதியில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி கழகச் செயலாளர் பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.