/* */

சிறுத்தை நடமாட்டம் ! வனத்துறை தீவிர தேடல்

சிறுத்தை நடமாட்டம் ! வனத்துறை தீவிர தேடல்
X

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அல்லிக்குளம் மற்றும் கிழவனேரி கிராம பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு அல்லிக்குளம் பகுதிகளில் வீடுகளில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என வருவாய்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதனடிப்படையில் இன்று அல்லிக்குளம், கிழவனேரி கிராம பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வத்திராயிருப்பு வனசரகர் கோவிந்தன் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். அதனுடைய கால்தடங்கள் தென்படுகிறதா மற்றும் எச்சம் ஏதேனும் தென்படுகிறதா என ஆராய்ந்து வருகின்றனர்.சிறுத்தை நடமாடும் அச்சத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடமாட வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 April 2021 6:34 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!