/* */

சக பயணியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப்: அரசுப் பேருந்தில் பரபரப்பு

சென்னையிலிருந்து புதுச்சேரி சென்ற அரசு பேருந்தில் பெண் ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு இறங்கிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சக பயணியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப்: அரசுப் பேருந்தில் பரபரப்பு
X

மீட்கப்பட்ட ஆண் குழந்தை.

சென்னையில் இருந்து அரசு பஸ் ஒன்று புதுவை நோக்கி வந்தது. அப்போது அந்த பேருந்தில் சென்னை நீலாங்கரையில் இருந்து ஒருவர் 4 மாத ஆண் குழந்தையுடன் தனியாக ஏறினார்.

அதன்பின் மற்றொரு ஸ்டாப்பில் புதுச்சேரியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் ஏறினார். பேருந்தில் ஓரளவு கூட்டமாக இருந்ததால் சரஸ்வதியிடம், அந்தக் குழந்தையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு அந்த நபர் ஒப்படைத்தார். பின்னர் உடல் சோர்வு காரணமாக படிக்கட்டிலில் உட்கார்ந்து அவர் பயணம் செய்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து சரஸ்வதி பார்த்தபோது, அந்த நபர் எங்கு இறங்கினார் என்று தெரியவில்லை. அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி உடனடியாக மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மரக்காணம் போலீசார் இந்த புகாரை கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி சரஸ்வதி கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 மாத கைக்குழந்தையை விட்டுச்சென்ற நபர் யார், எங்கிருந்து அந்த குழந்தையை கொண்டு வந்தார்.

இந்த குழந்தை அவருடைய தானா வேறு யாருடைய குழந்தையாவது திருடி வந்தாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பேருந்து கண்டக்டர் 4மாத அழகிய ஆண் குழந்தையை கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் பயணியுடன் இணைந்து மகளிர் போலீசாரும் ஆண் குழந்தையை கவனித்து வருகின்றனர்.

Updated On: 7 Feb 2022 6:09 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!