Begin typing your search above and press return to search.
செஞ்சி அருகே நானூறு லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நானூறு லிட்டர் கள்ள சாராய ஊரலை போலீசார் இன்று அளித்தனர்
HIGHLIGHTS
செஞ்சி அருகே நானூறு லிட்டர் சாராய ஊறல் போலீசார் அழிப்பு
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே நல்லான் பிள்ளை பெற்றால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கஞ்சூர் மலைப்பகுதியில் சாராய ஊறல் போட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பெயரில, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் படி சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுபா, உதவி ஆய்வாளர் திவாகர் மற்றும் போலீசார் அந்த மலை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்தனர்,உடனடியாக அந்த ஊரலை சம்பவ இடத்திலேயே கீழே கொட்டி அழித்தனர் இதனைத் தொடர்ந்து அந்த சாராய ஊறலை பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.