/* */

சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த பிரம்ம சூத்திர சிவலிங்கம்

வந்தவாசி அருகே சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த சிவலிங்கத்தை, பொதுமக்கள் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த பிரம்ம சூத்திர சிவலிங்கம்
X

சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த சிவலிங்கம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பணியாளர்கள் சாலை போடுவதற்கு பள்ளம் தோண்டினர். அப்போது வேப்பமரத்தடியில் மிகப்பெரிய சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் அந்த சிவலிங்கம் பிரம்ம சூத்திர குறியீடுடன் காணப்பட்டது. இந்த வகை சிவலிங்கம் மிகவும் பழமையானதாகவும் கூறப்படுகிறது. மேலும் 7-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து சிவலிங்கத்திற்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மேலும் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு மருந்தீஸ்வரர் என பெயிரிட்டு பொதுமக்கள் வழிபட்டனர். இதையடுத்து அங்கு கோவில் கட்டப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அப்பகுதி சுற்றியுள்ள ஏராளமான மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

கூட்டுறவு வங்கியில் பொதுப் பேரவை கூட்டம்:

போளூர் காமராஜர் கூட்டுறவு நகர வங்கியில் பொது பேரவை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. வங்கி செயலாளர் சார் பதிவாளர் சித்திக் அலி தலைமை வகித்தார். பொது மேலாளர் ராமு முன்னிலை வகித்தார். காசாளர் மோகன் வரவேற்றார். உதவி பொது மேலாளர் கேசவன் தணிக்கை அறிக்கை வாசித்தார்.

இதைத்தொடர்ந்து துணை விதி திருத்தம், பணியாளர்கள் ஓய்வு வயது 58 இல் இருந்து 60ஆக உயர்த்துவது வங்கியின் உத்தேச வரவு செலவு திட்டம் புதிய அங்கத்தினர் சேர்ந்துள்ளதை அங்கீகரித்தல், என பல தீர்மானங்களை நிறைவேற்றினார். அங்கத்தினர் எழுப்பிய கேள்விகளுக்கு பொது மேலாளர் ராமு தகுந்த பதில் அளித்தார். முடிவில் அங்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

14-வது வார்டு பகுதியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு:

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 14-வது வார்டு பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா நடந்தது. கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 14-வது வார்டு உறுப்பினராக மணி இருந்து வருகிறார். இந்த வார்டில் அடங்கிய மேட்டுப்பாளையம், காசி நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், கோடை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு வார்டு பகுதிகளில் மொத்தம் 10 இடங்களில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிறு மின்விசையுடன் கூடிய குடிநீர் தொட்டிகளை தனது சொந்த செலவில் அமைத்திருந்தார்.

இதன் திறப்பு விழா கவுன்சிலர் மணி தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நகர தி.மு.க. செயலாளர் அன்பு கலந்துகொண்டு தி.மு.க கொடிகளை ஏற்றி வைத்து குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினையும் அவர் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் 14வது வார்டு பகுதி ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 March 2023 10:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்