/* */

கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் 5 பேரை கைது செய்ய திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்தார்

HIGHLIGHTS

கொலை முயற்சியில் ஈடுபட்ட 5  பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

வந்தவாசி கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்த கிரி என்ற கிரிதரன் (வயது 26). அதே தெருவைச் சேர்ந்தவர் முகமதுசிப் (24). விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் (21). செய்யாறு தாலுகா தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நிலவன் என்ற அகஸ்தியன் (21). செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா மானாமதி கிராமத்தைச் சேர்ந்த ரிஷிநாத் (19) ஆகிய 5 பேரும் முன்விரோதம் காரணமாக செய்யாறு தாலுகா மேல்மா கிராமத்தைச் சேர்ந்த ஓசூரான் (21) என்பவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அவரையும், மனைவி ஹேமாவதியையும் கொலை செய்ய முயன்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வந்தவாசி வடக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வந்தவாசி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

5 பேரும் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்தில் எஸ்பி பவன்குமார், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்தார். மாவட்ட கலெக்டர் முருகேஷ் மேற்கண்ட 5 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 23 Dec 2021 7:01 AM GMT

Related News