/* */

வந்தவாசி அருகே டிராக்டர் மோதி 10-ம் வகுப்பு மாணவன் படுகாயம்

வந்தவாசி அருகே டிராக்டர் மோதி 10-ம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்தார்.

HIGHLIGHTS

வந்தவாசி அருகே டிராக்டர் மோதி 10-ம் வகுப்பு மாணவன் படுகாயம்
X

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமம் அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது.

இந்த நிலையில் டிரைவர் மனோஜ் என்பவர் பள்ளியின் டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது வந்தவாசி வீராசாமி முதலி தெருவை சேர்ந்த சலிம்பாஷா என்பவரின் மகன் தவுக்கீர் என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வேகமாக ஓடி வந்து டிராக்டரில் ஏற முயன்றார்.

அப்போது மாணவன் மீது டிராக்டர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவனை உடனடியாக அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோரின் தலைமையில் பள்ளி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வந்தவாசியில் முகாமிட்டுள்ளார்.இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 31 July 2022 1:14 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?